Saturday, August 11, 2007

போட்டியாளர்களுக்கு நன்றி - வாழ்த்துக்கள்

4 comments:
 
என் இனிய தமிழ் மக்களே,
எல்லோருக்கும் வணக்கம். கடந்த 10 நாட்களாக உருவப்பட போட்டிக்கு உங்க கிட்ட இருந்து வந்துக்கிட்டு இருந்த அன்பும் ஆதரவும் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கோங்க!!அதுவும் படங்கள் ஒவ்வொன்னும் வந்த அப்புறமா அவங்க சுட்டிக்கு போய் பார்த்து!!! அழகா இருந்துச்சுன்னா பார்த்து சந்தோஷப்பட்டுட்டு,ஏதாவது சொல்லனும்னு தோனிச்சுனா சொல்லிட்டு,ஆகா எவ்வளவு ஆனந்தம். நமக்கு தெரியாம இவ்வளவு ஆர்வமும் திறமையும் இருக்கறவங்க நம்ம தமிழ்ப்பதிவுலகத்துல இருக்காங்களா அப்படின்னு ஒரே ஆச்சரியம். ஒத்த கருத்துடைய எத்தனை அன்பர்கள்,அவர்கள் பார்வையில் விழுந்து பின் புகைப்படப்பெட்டியில் பதிந்த அருமையான படங்கள் அப்படின்னு ஒரு பத்து நாளைக்கு ஒரு இணைய புகைப்படக்கண்காட்சியே பாத்தா மாதிரி ஒரு உணர்வு. உங்களுக்கும் அப்படிதானே இருக்கு?? :)

போட்டின்னு பெயரை வெச்சா கூட,எங்களுடைய குறிக்கோளே இதுதானே!! புகைப்படக்கலை சார்ந்த அனைவரும் ஒன்று சேர வேண்டும்!! நாம் நமக்குள்ளே படங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டு நம் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும்,சிறக்க வேண்டும். இப்படிப்பட்ட இணைய உரையாடலுக்கு உறவாடலுக்கும் இந்த போட்டி ஒரு நல்ல பாலமாக இருக்கிறது என்பது கண்கூடு!!

முன்பே ஒரு பதிவில் கூறியது போல ,எது நல்ல படம்,எது அழகாக இல்லை என்று யாரால் கூறிவிட முடியும்??? நடுவர்கள் அவர்களின் பார்வையில் எது அழகாக தெரிகிறதோ ,அதைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். பின் இது போன்ற போட்டிகளால் என்ன இலாபம்???

நம் படங்களை வெளியிடுவதால் மற்ற ஆர்வலர்கள் வந்து பார்க்கவும் தங்கள் கருத்துகளை கூறவும் இப்படிப்பட்ட போட்டிகள் காரணியாக அமையும். அதுவும் தவிர மற்ற படங்களை பார்ப்பதால் நமக்கும் சில விஷயங்கள் பிடிபடும். அன்பர்களிடம் கலந்துரையாடுவதால் நமக்கு இருக்கும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை தெளிவுப்படுத்திக்கொள்ளலாம். படங்களுக்கு வரும் பின்னூட்டங்களில் இருந்து நமக்கு இதற்கு முன் தெரியாத விஷயங்கள் பல தெரிய வரலாம்!!
இப்படி வலையுலகில் புகைப்படக்கலை பற்றி கருத்து பரிமாற்றம் நடப்பதற்கான உந்துகோல் தான் இந்த போட்டி!!!
இப்படிப்பட்ட கருத்துரையாடல்களில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக்கொண்டால், அதுவே இந்த போட்டியின் மிகப்பெரிய வெற்றி.

இப்படி பத்து நாளைக்கு கலை கட்டிட்டு போட்டிக்கான கடைசி தேதிக்கு வந்து நிற்கிறோம் இப்பொழுது. போட்டிக்கு படம் அனுப்பி சிறப்பித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
வழக்கம் போல நடுவர்களுக்கு மண்டை காய போகிறது என்று தோன்றுகிறது."நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்" என்ற பாடலை என்னையும் அறியாமல் என் உதடுகள் முனுமுனுக்கிறது!!! :-D
போட்டியாளர்களை விட நடுவர்களுக்கு தான் அதிகமான வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் போல இருக்கிறது!! :-)

ஆனாலும் இந்த பதிவின் நோக்கமே ,பதிவர்களுக்கு இந்த குழுப்பதிவின் ஆசிரியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பது தான்!!!

வாழ்த்துக்கள் மக்களே!! போன தடவை போல இந்த தடவையும் உங்கள் படங்களை அனுப்பி அசத்திட்டீங்க!!!
இப்போ பந்து நடுவர்களின் அரங்கில் உள்ளது (The ball is in the judges' court) :-P

போட்டி அறிவிக்கப்பட்ட போது சொன்னது போல்,போட்டியின் முடிவுகள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி அறிவிக்கப்படும். அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது.


போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்
சீ.வீ.ஆர் மற்றும் Surveysan.

பி.கு: கலத்துகொண்டவர்களின் புகைப்படங்களின் சுட்டியைப் பார்க்க, வாழ்த்து சொல்ல இங்கே செல்லுங்கள்

4 comments:

  1. சூப்பர் படங்கள். ஆனா நம்பள்ளுக்குத் தேன் இந்த விசயம் தெரியாதே. விடுங்க அடுத்தமாசம் காமெரா வாங்கிட்டு வந்து-- போட்டியில-- வேணாம் ஓவர், பாத்துட்டு போறேன்னு சொல்ல வந்தேன்.

    வைகைப்புயல் ரசிகன்

    ReplyDelete
  2. Thanks CVR.

    Its going to be a tough job for the judges. too many cute kids in the lineup :)

    ReplyDelete
  3. What happened to august results , it is already 15th. Happy Independence day.

    ReplyDelete
  4. இம்சை.. /August 14, 2007 7:39 PM/ அது எப்படி உங்களுக்கு 15 ஆச்சு! Happy Independence day! Waiting for the results.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff